×

அதிமுக கோஷ்டி மோதல் வழக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி மனு

திருவில்லிபுத்தூர்: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த செப்.24ம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு சென்றார். அவருக்கு விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும், விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 7 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ெசய்யப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கேட்டு திருவில்லிபுத்தூரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்துள்ளார். அரசு வழக்கறிஞர் திருமலையப்பன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வழக்கு அக்.4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags : AIADMK ,Rajendrapalaji , AIADMK, factional conflict, case, Rajendrapalaji
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...